search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னவன் துரைசாமி"

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் விமர்சனம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
    தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று ஊர்த்தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.

    7 வருட பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்த நிலையில் 7 வருடமாக ஊரில் இல்லாத நாயகன் விஷால் ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் காதல் வருகிறது.



    கடைசியில், திருவிழாவில் நல்ல படியாக நடந்ததா? வரலட்சுமியின் குடும்ப பகை தீர்ந்ததா? விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் தனது வழக்கமான அதிரடியுடன் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு, படத்தின் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம். சூரி, முனிஸ்காந்த், கஞ்சா கருப்பு காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்றபடி அர்ஜய், ஹரிஷ் பேரடி, அப்பானி சரத், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.

    சண்டக்கோழி இரண்டாவது பாகத்தையும் பழிவாங்கல் கதையை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் தனது பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமாகவே உள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக நகர்கிறது.

    மொத்தத்தில் `சண்டக்கோழி 2' சீற்றம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi

    முளையூர் ஏ.சொனய் இயக்கத்தில் புரூஸ் - ரசியா நடிப்பில் உருவாகி இருக்கும் `புதிய புரூஸ்லி' படத்தின் விமர்சனம். #PuthiyaBrucelee #Bruce
    நாயகன் புரூஸ் மலையோர கிராமம் ஒன்றில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். தனது ஊருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னின்று அதனை சமாளிக்கும் ஒருவராக, அந்த ஊரை காத்து வருகிறார். அந்த ஊர் மக்கள் அனைவருமே, அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் புரூஸை அணுகுகின்றனர். இந்த நிலையில், அவர்கள் வாழ்ந்து வரும் குடிசையில் தீப்பிடித்து புரூஸின் அம்மா இறந்துவிடுகிறார். 

    அம்மாவை இழந்து தவிக்கும் புரூஸை அவரது மாமாவான தென்னவன் துரைசாமி கொஞ்ச நாள் தன்னுடன் இருக்கும்படி அழைத்துச் செல்கிறார். புரூஸ் தான் தங்களுக்கு காவல் தெய்வம் என்று அவரை சீக்கிரமாக அனுப்பி வைக்கும்படி அந்த ஊர் மக்கள் சொல்லி அனுப்புகின்றனர். 

    மதுரையில் சொந்தமாக ரைஸ்மில் வைத்திருக்கும் தென்னவன் துரைசாமி, தான் வாங்கிய இடம் ஒன்றை தனது நண்பனிடம் விற்க முயற்சி செய்கிறார். ஆனால் மற்றொரு தொழிலதிபர் ஒருவரும் அந்த இடத்தை அடைய நினைக்கிறார். 



    அதற்காக தென்னவன் துரைசாமிக்கு அவர் தொந்தரவு கொடுக்கிறார். இதற்கிடையே நாயகன் புரூஸ்க்கு தனது மாமா மகளான நாயகி ரசியா மீது காதல் வருகிறது. ஆனால் ரசியாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர்களது வீட்டில் பேசி முடிவு செய்கின்றனர். இதற்கிடையே அந்த தொழிலதிபர் ஆட்கள் பலரை அனுப்பி இவர்களை மிரட்டுகிறார். 

    கடைசியில், தனது மாமாவின் பிரச்சனையை புரூஸ் தீர்த்து வைத்தாரா? தனது மாமா மகளை திருமணம் செய்தாரா? தனது ஊருக்கு திரும்பிப் போனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    படத்தின் நாயகன் புரூஸ், புரூஸ்லி போன்ற தோற்றம் மட்டுமில்லாமல், சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். அவரது நடை, பார்வை என ஒவ்வொரு அசைவிலும் புரூஸ்லியை நினைவுபடுத்துகிறார். நாயகி ரசியா, தென்னவன் துரைசாமி, சுரேஷ் நரங் என மற்ற துணை கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்திருக்கின்றனர். 



    புரூஸ்லியை நினைவுபடுத்தும்படியாக சண்டையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்காக ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் முளையூர் ஏ.சொனய். குறைவான வசனங்களுடன் பார்வை, நடையிலேயே நாயகனின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தின் துவக்கத்தில் புரூஸ்லியை நினைவுபடுத்தியிருப்பது சிறப்பு. இத்தனை ஆண்டுகள் கடந்தும் புரூஸ்லி பற்றிய படங்கள் வருவது அவரது நீங்கா புகழை காட்டுகிறது.

    சவுந்தர்யனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவில் சிவசங்கர் புரூஸ்லியை நினைவு படுத்துகிறார். 

    மொத்தத்தில் `புதிய புரூஸ்லி' வரவேற்க்கத்தக்கது. #PuthiyaBrucelee #Bruce #Raziya
    ×